Date:

ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று (11) காலை மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகருக்கு அருகே 6.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஹெராத் நகருக்கு அருகே கடந்த 7 ஆம் திகதி அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் 2500-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

இந்த நிலநடுக்கங்களின் போதும், 6.3 ரிக்டர் அளவில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

பல கிராமங்கள் தரைமட்டமாகி, 2,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், அதே ஹெராத் நகருக்கு 28 கிலோ மீட்டர் தொலைவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று ஏற்பட்டுள்ளது.

இதுவும் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.

கடந்த நிலநடுக்கத்தின் பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

STF அழைப்பு; தீவிரமடையும் பதற்ற நிலை

மாத்தறை சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் தொடர்கிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்...

டான் பிரியசாத் உயிரிழப்பு என வெளியான செய்தியில் திருத்தம்

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் உயிரிழப்பு என வௌியாகும் செய்தியில் சிக்கல்....

Update டேன் பிரியசாத் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

Breaking News டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு

சற்றுமுன்னர் டேன் பிரியசாத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.       துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373