Date:

நீர், உணவு, மின்சாரம் எதையும் அனுமதிக்கமுடியாது – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவவ் காலண்ட் தாக்குதலுக்கு உள்ளான காஸாவை முழுமையாக முற்றகையிட இன்று உத்தரவிட்டுள்ளார்.

“நாங்கள் முழுமையாக காஸாவை முற்றகையிட்டுள்ளோம். மின்சாரம், உணவு, நீர், எரிவாயு எதுவும் அனுமதிக்க போவதில்லை. எல்லாம் முடக்கப்பட்டுள்ளது” என தனது விடியோ செய்தியில் குறிப்பிட்டு உள்ளார். இந்தப் பகுதி ஏறத்தாழ 23 லட்சம் மக்களைக் கொண்டது.

கடந்த சனிக்கிழமை தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதக் குழுவினர் எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் தனது எதிர் தாக்குதலை தொடங்குவதற்கு முன்பு நகர்ப்பகுதிகளில் மக்களை சுட்டுக் கொன்றனர்.

இஸ்ரேல் நாட்டுக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தங்கள் ஆதரவை தெரிவித்து இருந்த நிலையில் இரு தரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

“நாங்கள் விலங்குகளுடன் சண்டையிடுகிறோம். அதற்கேற்ப தான் நடந்து கொள்ள இயலும்” என தனது தரப்பை முன்வைத்து செய்தி வெளியிட்டுள்ளார் இஸ்ரேலிய பாதுகாப்பு துறை அமைச்சர்.

இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது நடத்திய தாக்குதலில் கிட்டத்தட்ட 493 பேர் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகின

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள்...

(Clicks) அநுரவுக்கு மாலைதீவில் அமோக வரவேற்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28)...

பாடசாலை மாணவர்களுக்கு இரண்டுவேளை இடைவேளை

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள்...

பொரளை விபத்து – கைதான சாரதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்

பொரளை மயான சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக...