Date:

நுவரெலியா மாகாஸ்தோட்டம் கீழ் பிரிவு தோட்ட ஆலயத்தில் திருட்டு – சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா மாகாஸ்தோட்டம் கீழ் பிரிவு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் (5) வியாழக்கிழமை இரவு திருட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் திருடனின் வருகையும் ஆலயத்தினுல் திருடும் செயற்பாடுகள் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாகாஸ்தோட்டம் கீழ் பிரிவு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய நிர்வாகத்தினர் சிசிடிவி கேமராவில் குறிப்பிட்ட சில காட்சிகள் கொண்டு அவை பரீசீலணை செய்து நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்கள்

இதற்கு முன்னரும் மூன்று முறைகள் இவ் ஆலயத்தில் சுவாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த தாழிமணி தங்க ஆபரணங்களையும் ஆலய ஒலிபெறுக்கி உபகரணங்கள் மற்றும் ஆலய உண்டியலை காணிக்கை பணம் என்பன திருட்டு போயிருந்தமை தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் இருப்பினும் அது தொடர்பில் பொலிஸார் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் ஆலய நிர்வாகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக தடயங்களை சேகரித்து ஆலயத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை உதவியாக கொண்டும் வழக்கு பதிவு செய்து நுவரெலியா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இனி O/L இல்லாமல் A/L படிக்கலாம்

2025/2026 கல்வியாண்டிற்கான உயர்தர தொழிற்கல்வி பிரிவில் தரம் 12 இல் சேருவதற்கான...

இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் தியாகியான பாலஸ்தீனர் எண்ணிக்கை  60,034...

ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளர் இராஜினாமா

ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளரும், மகப்பேறு மருத்துவருமான ஆலோசகர் வைத்தியர்...

இன்று இரவு விண்கல் பொழிவைக் காணலாம்; மக்களுக்கு அரிய வாய்ப்பு

இந்த ஆண்டு காணக்கூடிய முக்கிய விண்கல் பொழிவுகளில் ஒன்றான "சதன் டெல்டா...