Date:

பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

உப ரயில் கட்டுப்பாட்டாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று(05) காலை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட ரயில்வே திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பணிப்பகிஷ்கரிப்பு இவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று(05) பகல் 12 மணிக்கு முன்னதாக அனைத்து உப ரயில் கட்டுப்பாட்டாளர்களும் உடனடியாக தமக்குரிய பணியிடங்களுக்கு சமூகமளிக்க வேண்டுமென ரயில்வே பொது முகாமையாளரினால் முற்பகல் அறிவிக்கப்பட்டிருந்தது.

உரிய பணியிடங்களுக்கு சேவைக்கு சமூகமளிக்க முடியாதோர் அருகிலுள்ள ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டுமென ரயில்வே பொதுமுகாமையாளர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவரால் உப ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் தாக்கப்பட்டமை காரணமாக ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்களால் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக நேற்று(04) பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செம்மணி 3ஆம் கட்ட அகழாய்வு 2026 இல்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே...

விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

கைதான முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட...

கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை...