Date:

மக்களின் மின் கட்டணங்களை செலுத்தப்போகும் இராஜாங்க அமைச்சர்

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த, குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களது மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கு முன்வந்துள்ளார்.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்வில் நிலுவையாக இருந்த மின்சார கட்டணத்தை சனத் நிசாந்த செலுத்தியிருந்தார்.

இந்த நிலையில் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களின் மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், சனத் நிஷாந்த அமைப்பினால் இந்த மின்சார கட்டணங்கள் செலுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்கள் தங்களது மின்சார பட்டியலின் புகைப்படம் ஒன்றை 0777449492 என்ற whatsapp இலக்கத்திற்கு அனுப்பி வைக்க அல்லது 032 2259130 என்ற இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கட்டண விபரங்களை தெரிவிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்சவின் 26 இலட்சம் ரூபா மின்சார கட்டண நிலுவையை சனத் நிசாந்த அண்மையில் செலுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செம்மணி 3ஆம் கட்ட அகழாய்வு 2026 இல்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே...

விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

கைதான முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட...

கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை...