மஹியங்கனை பெரஹராவில் பங்கேற்க வந்த ‘சீதா’ எனும் யானை மீது வனவிலங்கு அதிகாரி ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இன்று (30) அதிகாலை 03.30 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காட்டு யானை என நினைத்து வனவிலங்கு அதிகாரி சீதாவை சுட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த யானைக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மஹியங்கனை பொலிஸாரிடம் நாம் வினவியதோடு, பொலிஸாரும் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW