Date:

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் – உலக வங்கி

ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பதற்கான இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெர்வோஸ்க்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் பல விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா மற்றும் உலக வங்கி அதிகாரிகளுடன் நியூயோர்க்கில் உள்ள உலக வங்கி தலைமையகத்தில் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது, உலக வங்கியின் தலைவர் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், நிலையான வளர்ச்சியை உறுதி செய்யவும் ஆதரவளிப்பதாக உறுதியளித்திருந்தார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் விரான் சமுதித்த சாதனை

இளையோர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் 192...

காசாவின் அமைதிக்கான சபையின் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியானது

காசாவின் அமைதிக்கான சபையின் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அமெரிக்க...

விபத்தில் சிக்கிய அசோக ரன்வலவின் மனைவி!

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில்...

மலையக மக்களுக்கு வடக்கில் வீடுகள்.!

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு, வடக்கில் வீடுகளை அமைப்பதற்கான நிதியுதவியை...