Date:

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் – உலக வங்கி

ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பதற்கான இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெர்வோஸ்க்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் பல விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா மற்றும் உலக வங்கி அதிகாரிகளுடன் நியூயோர்க்கில் உள்ள உலக வங்கி தலைமையகத்தில் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது, உலக வங்கியின் தலைவர் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், நிலையான வளர்ச்சியை உறுதி செய்யவும் ஆதரவளிப்பதாக உறுதியளித்திருந்தார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செம்மணி 3ஆம் கட்ட அகழாய்வு 2026 இல்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே...

விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

கைதான முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட...

கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை...