Date:

பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய 6 சந்தேகநபர்கள் கைது

கல்கிசையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(24) பிற்பகல் கல்கிசை கடலில் பாறைகள் உள்ள ஆபத்தான இடத்தில் சிலர் நீராடுவதாக கரையோர பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதனையடுத்து, அங்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள், நீராடிக்கொண்டிருந்தவர்களை அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அந்த சந்தர்ப்பத்தில் ​​குறித்த நபர்கள் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரத்மலானை, பிலியந்தலை, அஹுங்கல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் சிகிச்சை பெற்று வௌியேறியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து

அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (17) முதல் அனைத்து...

நாட்டில் இருந்து 20 சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம்

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களில் சுமார் 20...

பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில் மேலும் பலர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல்...

தபால் ஊழியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க...