Date:

கலேவெல விபத்தில் இருவர் பலி

தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியின் கலேவெல பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று பேருந்துடன் மோதி பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து இன்று (24) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த இருவரும் ஆராச்சிக்கட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், தனிப்பட்ட பயணத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் எதிர் திசையில் பயணித்த பேரூந்துடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதியுள்ளது.

காயமடைந்தவர்களில் பெண் ஒருவரும் , ஆண் ஒருவரும் 7 வயது சிறுமி ஒருவரும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6...

பங்களாதேஷில் மீண்டும் போராட்டம்

பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம், நேற்று ஜூலை சாசனத்தில்...

தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) மத்திய மற்றும் ஊவா...

இன்றைய தங்க விலை | ஏறிய வேகத்தில் வீழ்ச்சி…!

கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையின் தகவலின்படி, இன்று (18) காலை தங்க...