காலியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி – டிக்சன் வீதியில் கார் ஒன்றிற்குள் பயணித்த வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடாத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த வர்த்தகர் உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW