Date:

தயாசிறிக்கு மைத்திரிபால எழுதிய கடிதத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரினால் வெளியிடப்பட்ட கடிதத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, கடந்த திங்கட்கிழமைஅனுப்பிய கடிதத்தில் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என்றும், அவரிடம் மன்னிப்புக் கோருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம், மன்னிப்புக் கோரி அவ்வாறான கடிதத்தை வழங்குவதற்கு கட்சியின் தலைவருக்கு அதிகாரம் இல்லை என தயாசிறி ஜயசேகர நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து சமர்ப்பணங்களையும் பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி, எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி வரை இந்த தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கடத்தப்பட்ட பாடசாலை சிறுவன், வெள்ளை வேனில் இருந்து குதித்து தப்பி வந்தான்

கஹதுடுவ பகுதியில் வைத்து வெள்ளை வேனில் கடத்தப்பட்ட  15 வயதுடைய சிறுவன்...

இலங்கையின் ஏற்றுமதிகளில் 70 முதல் 80 சதவீதம் வரை வரிகள் இல்லாமல்

இலங்கையின் ஏற்றுமதிகளில் 70 முதல் 80 சதவீதம் வரை வரிகள் இல்லாமல்...

புதிய கல்விச் சீர்திருத்தம் – வரலாறு, அழகியல், தொழில்சார் பாடங்கள்..

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி...

City of Dreams Sri Lanka ஆரம்ப விழா சிறப்பு விருந்தினர் பங்கேற்பில் திடீர் மாற்றம்

தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த உல்லாச விடுதியான City of Dreams Sri...