Date:

12 வயது சிறுமியின் இறப்பு குறித்து வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

கோப்பாய், திராணவெளியில் உள்ள ஓய்வு விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட 12 வயது சிறுமி உண்மையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓய்வறையில் அவர் உடனிருந்த பெண் அவருக்கு இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி, அறை ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக ஊழியர் ஒருவர் தெரிவித்ததை அடுத்து, போலீசார் ஓய்வறையை ஆய்வு செய்தனர்.

சிறுமியின் சடலத்தைக் கண்டுபிடித்ததுடன், அதே அறையில் மற்றொரு படுக்கையில் ஒரு பெண் சுயநினைவின்றி இருப்பதைக் கண்டதாகவும், அவர் ஆம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

63 வயதுடைய குறித்த பெண் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற “பவளப் பொங்கல் 2026”

இலங்கையின் முன்னணித் தமிழ் பாடசாலைகளில் ஒன்றான இந்துக் கல்லூரி கொழும்பு, தனது...

ஜொலிக்கப் போகும் ராகம நகரம்..!

ராகம நகரத்தை மையமாகக் கொண்டு பல்வகை போக்குவரத்து மத்திய நிலையம் ஒன்றை...

அனுஷ பெல்பிட்ட கைது!

முன்னாள் அமைச்சின் செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான அனுஷ பெல்பிட்ட, இலஞ்சம் மற்றும்...

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட...