Date:

12 வயது சிறுமியின் இறப்பு குறித்து வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

கோப்பாய், திராணவெளியில் உள்ள ஓய்வு விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட 12 வயது சிறுமி உண்மையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓய்வறையில் அவர் உடனிருந்த பெண் அவருக்கு இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி, அறை ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக ஊழியர் ஒருவர் தெரிவித்ததை அடுத்து, போலீசார் ஓய்வறையை ஆய்வு செய்தனர்.

சிறுமியின் சடலத்தைக் கண்டுபிடித்ததுடன், அதே அறையில் மற்றொரு படுக்கையில் ஒரு பெண் சுயநினைவின்றி இருப்பதைக் கண்டதாகவும், அவர் ஆம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

63 வயதுடைய குறித்த பெண் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செம்மணி 3ஆம் கட்ட அகழாய்வு 2026 இல்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே...

விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

கைதான முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட...

கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை...