Date:

12 வயது சிறுமியின் இறப்பு குறித்து வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

கோப்பாய், திராணவெளியில் உள்ள ஓய்வு விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட 12 வயது சிறுமி உண்மையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓய்வறையில் அவர் உடனிருந்த பெண் அவருக்கு இன்சுலின் ஊசி போட்டு கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி, அறை ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக ஊழியர் ஒருவர் தெரிவித்ததை அடுத்து, போலீசார் ஓய்வறையை ஆய்வு செய்தனர்.

சிறுமியின் சடலத்தைக் கண்டுபிடித்ததுடன், அதே அறையில் மற்றொரு படுக்கையில் ஒரு பெண் சுயநினைவின்றி இருப்பதைக் கண்டதாகவும், அவர் ஆம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

63 வயதுடைய குறித்த பெண் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொட்டாஞ்சேனையில் தீ பரவல்

அதுகொட்டாஞ்சனை மக்கள் வங்கியில் மின்சாரம் வயர்கள் நெருப்பு எடுத்து தீ பிடித்தது...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ரிசாட் பதியுதீன் அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கை..!

இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நிகழ்ந்த குண்டுத்...

யாழில் விரைவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!

தனது அரசாங்கத்தின் முதல் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச...

சிறி தலதா வழிபாடு” இன்று முதல் ஆரம்பம்

சிறி தலதா வழிபாடு" இன்று முதல் ஆரம்பம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373