கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சைகள் நடத்தப்படும் தரங்களில் மாற்றம் செய்ய அரசாங்கம் தயாராகி வருகிறது.
இதற்கிணங்க, சாதாரண தர பரீட்சையை தரம் 10 இலும், உயர் தர பரீட்சையை தரம் 12 இலும் நடத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW