Date:

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழு நாட்டிற்கு வருகை

 

கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளது.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அழைப்பிற்கிணங்க அந்த குழுவினர் நாட்டிற்கு வந்துள்ளனர்.

இலங்கையின் கரையோரப் பகுதிகளை பாதுகாப்பது தொடர்பில் 3 செயன்முறைகளின் ஊடாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இந்நாட்டு அதிகாரிகளை தௌிவுபடுத்தவுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கப்பல் விபத்து மற்றும் கடலோர குழாய் அமைப்புகளில் காணப்படும் கோளாறுகள் ஆகியவற்றை முன்கூட்டியே தடுத்தல், கப்பல் விபத்துகள் ஏற்பட்டால் அதன் பாதிப்பை சரியாக மதிப்பிடுதல் மற்றும் அவ்வாறான பாதிப்புகளுக்கான இழப்பீடுகளை பெற்றுக்கொள்வதற்கான சரியான நடைமுறை ஆகிய செயன்முறைகள் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கு தௌிவுபடுத்தப்படவுள்ளது.

இந்த தௌிவுபடுத்தலுக்காக இலங்கை துறைமுக அதிகாரசபை, கரையோர பாதுகாப்பு திணைக்களம், இடர்முகாமைத்துவ நிலையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன.

போதுமான தொழில்நுட்ப அறிவின்மையால் X-Press Pearl கப்பல் விபத்தின் பின்னர் நாட்டிற்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டின் பின்னர் நாட்டின் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் பலர் உயிரிழப்பு

ஈரானில் நீதித்துறை கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர்...

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை முழுவதும் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை...

குழந்தையின் பொம்மைக்குள் போதைப்பொருள்

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண்...

எம்பியாக பதவியேற்றார் கமல்ஹாசன் :மகள் உட்பட பலர் வாழ்த்து !

உலகநாயகனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் ராஜ்யசபா...