போக்குவரத்து அமைப்பில் நிலவும் பிரச்சினைகளை தெரிவிப்பதற்காக தகவல் நிலையம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
1958 என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலம் பொதுமக்கள் புகார்கள், விசாரணைகள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்கலாம் என்று அதன் செயல் வணிக மேலாளர் எரந்த தில்ஹான் தெரிவித்தார்.
இதேவேளை, சுற்றுலாத்துறையை மையப்படுத்தி போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
உணவு மற்றும் பானம் உள்ளிட்ட சொகுசு வசதிகளை உள்ளடக்கியதாக 17 டபுள் டெக்கர் பேருந்துகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், கொழும்பு நகரத்தை சுற்றி 4 சுற்றுகள் சுற்றி வரவுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அறுகம்பை, பெந்தோட்டை, மிரிஸ்ஸ, எல்ல-வெல்லவாய, பொலன்னறுவை மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களை இலக்காகக் கொண்டு இந்த பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW