அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கும் வரை, அவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவொன்றை வழங்க முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த 5000 ரூபா கொடுப்பனவை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு வழங்க, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.