Date:

நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து; கொழும்பு தேசிய வைத்தியசாலை விசேட வைத்தியர்களின் அறிவிப்பு

சத்திரசிகிச்சை நிலையங்கள் மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளின் உட்புறங்களை சுத்தப்படுத்துவதற்கு வெளி பணியாளர்களை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அறுவைசிகிச்சைக்குப் பிறகும், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்றும் பல்வேறு ஆபத்தான நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவரின் அறிவுரையின் கீழ் இந்த செயல்முறை தொடர்கிறது என்றும் தொற்று கட்டுப்பாட்டு பிரிவு நிலைமையை உறுதி செய்துள்ளதாகவும் விசேட வைத்தியர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலை சிறுவர் வைத்தியசாலையிலோ அல்லது ஏனைய பிரதான வைத்தியசாலைகளிலோ காணப்படாத போதிலும் நாட்டின் பிரதான வைத்தியசாலையான தேசிய வைத்தியசாலையின் நிலை வியப்பளிப்பதாக விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்திர சிகிச்சை அரங்குகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளை சுத்தம் செய்வதற்காக கழிவறைகள், வடிகால் மற்றும் கழிப்பறை குழிகள் போன்ற அசுத்தமான இடங்களில் சுற்றித் திரியும் தொழிலாளர்களை இதற்காக பயன்படுத்துவது நல்ல நிலைமையல்ல எனவும் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலை குறித்து ஜனாதிபதிக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றம்

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று பொது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373