Date:

காபூல் விமான நிலையத்தில் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை

காபூல் விமான நிலையத்தில் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

இராணுவ தளபதியினால் இது தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க துருப்பினர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

எனினும் பிரித்தானிய தூதரக அதிகாரிகள் உட்பட சகலரும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 170 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு ஐ.எஸ் – கே அமைப்பினர் உரிமை கோரியிருந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா ஆளில்லா விமானக் கருவி தாக்குதலை மேற்கொண்டது.

இதில் ஐ.எஸ் – கே அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் ஒருவர் தாக்குதல்களுக்கான திட்டத்தை வகுத்தவர் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய வங்கியில் மாயமான 50 இலட்சம் ரூபா பணம் – பல கோணங்களில் விசாரணை

மத்திய வங்கியில் காணாமல் போன 50 இலட்சம் ரூபா தொடர்பில் பல...

ICC தடை தொடர்பில் வௌியான புதிய கதை!

இலங்கை கிரிக்கட் நிறுவனத்துடன் சர்ச்சையில் சிக்கிய விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை...

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரம் – 5 ஆம் திகதி விசாரணை!

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05...

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

இரண்டு மூன்று நாட்களுக்குள் 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண...