Date:

காபூல் விமான நிலையத்தில் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை

காபூல் விமான நிலையத்தில் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

இராணுவ தளபதியினால் இது தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க துருப்பினர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

எனினும் பிரித்தானிய தூதரக அதிகாரிகள் உட்பட சகலரும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 170 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு ஐ.எஸ் – கே அமைப்பினர் உரிமை கோரியிருந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா ஆளில்லா விமானக் கருவி தாக்குதலை மேற்கொண்டது.

இதில் ஐ.எஸ் – கே அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் ஒருவர் தாக்குதல்களுக்கான திட்டத்தை வகுத்தவர் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின்...

எரிவாயு விநியோகம் செய்வதில் சிக்கல்

கொழும்பு, பதுளை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 48 பகுதிகளுக்கு...

உயிரிழப்பு 474 ஆக அதிகரிப்பு

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த...

இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான Apple நிறுவனம், ஆசியாவில் பேரழிவுகளால்...