Date:

காபூல் விமான நிலையத்தில் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை

காபூல் விமான நிலையத்தில் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

இராணுவ தளபதியினால் இது தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க துருப்பினர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

எனினும் பிரித்தானிய தூதரக அதிகாரிகள் உட்பட சகலரும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 170 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு ஐ.எஸ் – கே அமைப்பினர் உரிமை கோரியிருந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா ஆளில்லா விமானக் கருவி தாக்குதலை மேற்கொண்டது.

இதில் ஐ.எஸ் – கே அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் ஒருவர் தாக்குதல்களுக்கான திட்டத்தை வகுத்தவர் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking களனி கங்கையின் வெள்ள நீர் மட்டம் மேலும் அதிகரிப்பு

களனி கங்கையின் வெள்ள நீர் மட்டம் மேலும் அதிகரித்துள்ளது. நாகலகம் வீதிய பகுதியில்...

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

இன்று மாலை 6.00 மணி வரையான நிலவரப்படி மோசமான வானிலை காரணமாக...

இது தேசத்தின் துயரம்..!

மிகுந்த வேதனையுடனும் கனத்த இதயத்துடனும் இச்செய்தியைப் பகிர்கிறோம். ​நாட்டில் எதிர்பாராமல் ஏற்பட்ட கடுமையான...

கம்பளையில் பெரும் துயர்

கம்பளை வைத்தியசாலையில் மாத்திரம் தற்போது மரணித்தவர்களின் 48 உடல்கள் காணப்படுகின்றன. 100...