திருமண விளம்பரம் மூலம் தொடர்பை ஏற்படுத்தி 67 வயதுடைய நபரை அச்சுறுத்தி 69 இலட்சம் ரூபா பணத்தை தனது வங்கிக் கணக்கில் வைப்பிலிடச் செய்த 57 வயதுடைய பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் நிட்டம்புவ தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த மோசடிக்கு இதற்கு உறுதுணையாக இருந்ததாகக் கூறப்படும் 26 மற்றும் 32 வயதுடைய இருவர் சந்தேகத்தின் பேரில் இந்தப் பெண்ணுடன் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் கண்டி கண்ணொருவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் சந்தேக நபர்கள் இருவரும் ஈரியகம மற்றும் முருத்தலாவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW