பாரிய நோய்தாக்கத்திற்கு உள்ளாகக்கூடிய நோயாளர்களுக்கு எதிர்வரும் நவம்பர், டிசம்பர் மாதமளவில் மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்கு அவசியம் ஏற்படுமாயின் அதற்கான நடவடிக்கைகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அரச மருத்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தவிசாளர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு உள்ளாக கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்தக் கூடிய வகையில் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.