வெட்டுக் காயங்களுக்காக சிகிச்சை பெற்று வந்த நபர் இரண்டாவது மாடியில் இருந்து தவறி வீழ்ந்து இன்று (31) உயிரிழந்துள்ள சம்பவம் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் (59) வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 29ஆம் திகதி வெட்டுக் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.