Date:

யாழ், கிழக்கு பல்கலைக்கழங்களின் சித்த மருத்துவ பிரிவுகளை, பீடங்களாக தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி

யாழ், கிழக்கு பல்கலைக்கழங்களின் சித்த மருத்துவ பிரிவுகளை தரமுயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த பிரிவுகளைப் பீடங்களாகத் தரமுயர்த்துதல் தொடர்பில் கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இந்த பிரிவுகளில் பீடங்களாக மாற்றுவதற்கு  போதியளவு கல்வி மற்றும் ஊழியர்கள் வசதிகள் உள்ளனவா என்பதை ஆராய்ந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிக்கையைப் பெற்றுக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய, சித்த மருத்துவ பிரிவுகளைப் பீடங்களாக மாற்றம் செய்வதற்குப் போதுமானளவு மனிதவளம் மற்றும் பௌதீக வளங்கள் காணப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிப்பு

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில்...

Breaking: மக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டிருந்த 42 இந்தியர்கள் உயிரிழப்பு!

தெலுங்கானாவில் இருந்து மக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்கள் இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளனர் இந்த...

முன்னாள் பிரதி சபாநாயகர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்

முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று முற்பகல் 9.00 மணியளவில்...

காலிமுகத்திடல் கடலில் மூழ்கி இளைஞன் பலி

கோட்டை காவல் பிரிவின் காலி முகத்திடல் பகுதியில் 6.11.2025 அன்று மாலை,...