Date:

யாழ், கிழக்கு பல்கலைக்கழங்களின் சித்த மருத்துவ பிரிவுகளை, பீடங்களாக தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி

யாழ், கிழக்கு பல்கலைக்கழங்களின் சித்த மருத்துவ பிரிவுகளை தரமுயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த பிரிவுகளைப் பீடங்களாகத் தரமுயர்த்துதல் தொடர்பில் கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இந்த பிரிவுகளில் பீடங்களாக மாற்றுவதற்கு  போதியளவு கல்வி மற்றும் ஊழியர்கள் வசதிகள் உள்ளனவா என்பதை ஆராய்ந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிக்கையைப் பெற்றுக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய, சித்த மருத்துவ பிரிவுகளைப் பீடங்களாக மாற்றம் செய்வதற்குப் போதுமானளவு மனிதவளம் மற்றும் பௌதீக வளங்கள் காணப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று 2 வது தடவையாகவும் தங்க விலையில் வீழ்ச்சி

நாட்டில் இன்றைய (22) தினம் இரண்டாவது தடவையாகவும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி...

இளஞ்சிவப்பு புதன்கிழமை

மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கி இளஞ்சிவப்பு நிறமாக மாறிய...

நாளை 10 மணிநேர நீர்வெட்டு

கொழும்பு மற்றும் பல பகுதிகளில் நாளை (23) 10 மணி நேர...

Breaking துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபைத் தலைவர் பலி

அடையாளம் தெரியாதோர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த வெலிகம பிரதேச...