நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, கிறைஸ்ட்சர்சில் தொடர்ச்சியாக பெய்த மழையினால், ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
இன்றைய போட்டி காலை 6.30 க்கு (உள்ளூர் நேரப்படி 2 மணி) ஆரம்பமாகவிருந்த நிலையில், மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டி கைவிடப்பட்டது.