சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 330 மில்லியன் டொலர்கள் விரிவான கடன் வசதி கிடைத்ததைத் தொடர்ந்து, மேலும் 7 பில்லியன் டொலர்களை சலுகைக் கடனாக இலங்கை பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியின் உதவியின் கீழ் இந்தக் கடன்கள் பெறப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.