சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட 330 மில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட கடன் தொகையில், இந்திய கடன் திட்டத்தின் முதல் தவணையை செலுத்த பயன்படுத்தப்பட்டதாக, நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதற்கான தவணைக் கொடுப்பனவான 121 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வியாழக்கிழமை (23) செலுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.