Date:

பணம் தருகிறீர்களா? இல்லையா? – சபையில் சஜித்

நாடாளுமன்றத்தில் இன்று (24) கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஒ​ரேயொரு சொல்லில் பதிலளிக்குமாறு கேள்​வியெழுப்பினார். அதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பல சொற்களை இணைந்து பதிலளித்தார்.

முன்னதாக கேள்வியெழுப்பிய சஜித் பிரேமதாஸ, தேர்தலை நடத்துவதற்கு,  பணம் தருகிறீர்களா? இல்லையா? அதற்கு ஒரு வார்த்தையில் பதிலளிக்குமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த 10 பில்லியனை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு  வழங்கி தேர்தலை நடத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு  இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் பிரதமர் தினேஷ் குணவர்தன,  இதுபற்றி உயர் நீதிமன்றத்தில் பல விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.அந்தத் தீர்ப்புகளின் படியே நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாவலப்பிட்டியில் குண்டுப்புரளி

நாவலப்பிட்டியில் உள்ள பஸ்பாகே கோரல பிரதேச செயலகத்தின் சேமிப்பு அறை உட்பட,...

சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா என்ற சிறுமி...

பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

மின்சாரம், எரிபொருள், பெட்ரோலியம், எரிவாயு விநியோகம் ஆகிய சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக...

வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை...