இன்று சனிக்கிழமை (25) முற்பகல் 11 மணி முதல் இரவு 09 மணி வரை 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர்வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவெல மாநகர சபைப் பிரிவு, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகர சபை பகுதி, கொடிக்காவத்தை முல்லேரியா பிரதேச சபை பகுதி, ரத்மலானை மற்றும் கட்டுபெத்த பகுதிகளில் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.