இந்திய பிரதமர் நரேந்திர மோடி பற்றிய பிபிசி ஆவணப்படம் திரையிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது, கிட்டத்தட்ட 1,000 பேர் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் குறித்த ஆவணப்படத்தில் காட்டப்படுகின்றது.
இதேவேளை, மோடி மீதான கேள்வி” என்ற பிபிசி ஆவணப்படத்தை டெல்லி பல்கலைக் கழக வளாகத்தில் திரையிட உதவியதாகக் கூறி, லோகேஷ் சோவ் மற்றும் சட்ட மாணவர் ஒருவருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் ஓராண்டு தடை விதித்துள்ளது.
“டெல்லி பல்கலைக் கழகத்தின் பதிவாளர் மானுடவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற லோகேஷ் மற்றும் சட்ட மாணவர் ரவீந்தர் ஆகியோர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய தடை. அவர்கள் இக்குறிப்பாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஒரு ஆண்டிற்கு எந்தவொரு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி அல்லது துறைத் தேர்வு அல்லது தேர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று மார்ச் 10 ஆம் தேதி நிர்வாகம் வெளியிட்ட குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு மாணவர்களுக்கும் வழங்கப்பட்ட குறிப்பாணையில், டெல்லி பல்கலைக்கழக பதிவாளர் பிபிசி-யின் இந்தியா: மோடி மீதான் கேள்வி என்ற ஆவணப்படம் பல்கலையில் தடை செய்யப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பிபிசி ஆவணப்படத்தைக் காண்பிப்பதில் பங்கேற்பது லோகேஷ் சோவ்-கின் ஒழுக்கமின்மை செயலாகும்” என்று குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.