Date:

மோடி குறித்த பிபிசி ஆவணப்படம்: திரையிட்ட மாணவர்களை ஒடுக்கும் நடவடிக்கை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பற்றிய பிபிசி ஆவணப்படம் திரையிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது, ​​கிட்டத்தட்ட 1,000 பேர் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் குறித்த ஆவணப்படத்தில் காட்டப்படுகின்றது.

இதேவேளை, மோடி மீதான கேள்வி” என்ற பிபிசி ஆவணப்படத்தை டெல்லி பல்கலைக் கழக வளாகத்தில் திரையிட உதவியதாகக் கூறி, லோகேஷ் சோவ் மற்றும் சட்ட மாணவர் ஒருவருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் ஓராண்டு தடை விதித்துள்ளது.

“டெல்லி பல்கலைக் கழகத்தின் பதிவாளர் மானுடவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற லோகேஷ் மற்றும் சட்ட மாணவர் ரவீந்தர் ஆகியோர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய தடை. அவர்கள் இக்குறிப்பாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஒரு ஆண்டிற்கு எந்தவொரு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி அல்லது துறைத் தேர்வு அல்லது தேர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று மார்ச் 10 ஆம் தேதி நிர்வாகம் வெளியிட்ட குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு மாணவர்களுக்கும் வழங்கப்பட்ட குறிப்பாணையில், டெல்லி பல்கலைக்கழக பதிவாளர் பிபிசி-யின் இந்தியா: மோடி மீதான் கேள்வி என்ற ஆவணப்படம் பல்கலையில் தடை செய்யப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பிபிசி ஆவணப்படத்தைக் காண்பிப்பதில் பங்கேற்பது லோகேஷ் சோவ்-கின் ஒழுக்கமின்மை செயலாகும்” என்று குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இளம் காதலி பரிதாபம் ;கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில்…

கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில் 9விழுந்து ஒரு பெண் உயிரிழந்துள்ளார். கோஹிலவத்தை...

துப்பாக்கிகளை கோரிய 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்!

தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்...

ரஜரட்ட பல்கலை பேராசிரியர்களின் வேலைநிறுத்தம் தீவிரம்

ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம், அண்மையில் ஆரம்பித்திருந்த அடையாள வேலைநிறுத்தத்தை, காலவரையற்ற...

நவம்பர் 04 நள்ளிரவுடன் தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் தடை

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான...