Date:

நுவரெலியா மருத்துவமனையில் 23 பேருக்கு கொரோனா!

நுவரெலியா பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் உள்ளிட்ட 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

மருத்துவர்கள் 3 பேர், தாதியர்கள் 13, கனிஷ்ட பிரிவு ஊழியர்கள் 7 பேர் என மொத்தமாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்தார்.

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான மருத்துவர்கள், தாதியர் உள்ளிட்ட கனிஷ்ட ஊழியர்கள் சிலர் மருத்துவமனையின் கொரோனா வாரட்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறைந்த அறிகுறிகள் உள்ள சிலர் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், எவ்வாறாயினும் தற்போதுள்ள மருத்துவர்கள், தாதியர்களைக் கொண்டு பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவை அனுமதி

பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக...

கட்டாரில் இருந்து நேரடியாக தேசிய அணியில் இணைந்து கொள்ளும் வியாஸ் காந்த்

பாகிஸ்தானில் நடைபெறும் டி20 முத்தரப்பு தொடருக்கான இலங்கையின் தேசிய ஆடவர் அணியில்...

புதிய பெற்றோலிய குழாய் வழித்தடத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி

கொலன்னாவ முனையம் தொடக்கம் கொழும்பு துறைமுகம் வரைக்குமான குழாய் வழியில் பெற்றோலியப்...

பேருவளை கடலில் மிதந்து வந்த 200 கிலோ பொதிகள் மீட்பு

பேருவளை கடற்கரையில் இருந்து சுமார் இரண்டரை கடல் மைல் தொலைவில் கடலில்...