தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 502 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன். தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 56,796 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, மேல்மாகாண எல்லைப் பகுதிகளில் உள்ள 13 சோதனை சாவடிகளில் 757 வாகனங்களும், 1509 நபர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.