Date:

வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த IPL தொடருக்கு தெரிவு

இலங்கை கிரிக்கெட் வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் 2021 IPL கிரிக்கெட் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட போட்டிகளில் கலந்துகொள்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அடம் ஸம்பாவுக்கு பதிலாக வனிந்து ஹசரங்கவை அணிக்கு அழைத்துள்ளதாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் டேனியல் ஷாம்ஸுக்கு பதிலாக துஷ்மந்த சமீர தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

2021 IPL கிரிக்கெட் தொடரின் 29 போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றதுடன் COVID – 19 தொற்று காரணமாக எஞ்சிய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

அதனடிப்படையில், இரண்டாவது கட்ட போட்டிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன்...

இந்துக் கல்லூரி கொழும்பு ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய எண்ணெய்க் காப்பு திருவிழா

தலைநகரின் கல்விப் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்துக் கல்லூரி...

2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள...