Date:

வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த IPL தொடருக்கு தெரிவு

இலங்கை கிரிக்கெட் வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் 2021 IPL கிரிக்கெட் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட போட்டிகளில் கலந்துகொள்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அடம் ஸம்பாவுக்கு பதிலாக வனிந்து ஹசரங்கவை அணிக்கு அழைத்துள்ளதாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் டேனியல் ஷாம்ஸுக்கு பதிலாக துஷ்மந்த சமீர தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

2021 IPL கிரிக்கெட் தொடரின் 29 போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றதுடன் COVID – 19 தொற்று காரணமாக எஞ்சிய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

அதனடிப்படையில், இரண்டாவது கட்ட போட்டிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானில் உலகப் பாரம்பரியத் தளம் சேதம் – UNESCO கவலை!

யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்ட, தெஹ்ரானில் உள்ள...

போர் பதற்றத்தால் தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள்...

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் தந்தை வழக்கறிஞர் எஸ்.கே. சங்கக்கார காலமானார். அவரது உடல்...

14 நாடுகளிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற அவசர எச்சரிக்கை; ரியாத்திலுள்ள தூதரகத்தின் மீதும் தாக்குதல்

மத்திய கிழக்கின் 14 நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு...