Date:

வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த IPL தொடருக்கு தெரிவு

இலங்கை கிரிக்கெட் வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் 2021 IPL கிரிக்கெட் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட போட்டிகளில் கலந்துகொள்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அடம் ஸம்பாவுக்கு பதிலாக வனிந்து ஹசரங்கவை அணிக்கு அழைத்துள்ளதாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் டேனியல் ஷாம்ஸுக்கு பதிலாக துஷ்மந்த சமீர தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

2021 IPL கிரிக்கெட் தொடரின் 29 போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றதுடன் COVID – 19 தொற்று காரணமாக எஞ்சிய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

அதனடிப்படையில், இரண்டாவது கட்ட போட்டிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீடுகளைச் சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிப்பு

அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும் போது,...

களனி கங்கையின் நீர்மட்டம் சிறு வெள்ள மட்டம் வரை குறைந்தது

களனி கங்கையின் நீர்மட்டம் தற்போது சிறு வெள்ள மட்டம் வரை குறைந்துள்ளதாக...

“பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதியில் மாற்றமில்லை”

மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதியில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என...

பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி தொடர்பான தீர்மானம்

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும்...