நாட்டை முழுமையாகவோ, பகுதியளவிலோ முடக்கவேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுத்தியுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, சாதாரண மக்கள் தொடர்பில் ஆகக்கூடுதலான கவனத்தை செலுத்தவேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அக்கடிதத்தின் பிரதியை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அனுப்பிவைத்துள்ளார்.