Date:

நாட்டை முழுமையாக முடக்குவதா? இல்லையா நாளை

நாட்டை முழுமையாக முடக்குவதா? இல்லை தற்போது அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகளை இன்னுமின்னும் இறுக்கமாக்குவதா? என்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம், நாளை வௌ்ளிக்கிழமை எடுக்கப்படக்கூடுமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாயபய ராஜபக்ஷ தலைமையில், கொவிட்-19 செயலணி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் கூடும். அந்த வகையில், நாளைக்கும் அந்த செயலணி கூடவுள்ளது.

இதன்​போது சுகாதார தரப்பினரால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளுக்கு அமையவே, அடுத்தக்கட்டத் தீர்மானங்கள் எட்டப்படவுள்ளன.

ஆகக் குறைந்தது மூன்று வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு அரசாங்கத்தின் பங்காளிகட்சிகளில் பத்து கட்சிகள், ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தன.

இந்நிலையில், கொரோனாத் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்குமாறு மற்றுமொரு பங்காளியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இன்றையதினம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி தொடர்பான தீர்மானம்

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும்...

வௌிநாட்டு நன்கொடைகளை சுங்கவரியின்றி இறக்குமதி செய்ய திட்டம்

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை...

ஐக்கிய அரபு எமிர் இராச்சியத்திலிருந்து உதவி

இலங்கை எதிர்கொள்ளும் பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவி வழங்குவதற்காக...

இலங்கைக்கு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்

இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் பரவலான...