Date:

​தொடரும் மர்மமான பெண்கள் மரணம் – இன்றும் சில பெண்கள் மீட்பு

தெரணியகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

இருவரும் சகோதரிகள் என்பதுடன், வீட்டில் இருந்த 90 வயதான அவர்களது தாயார் தற்போது தெரணியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

51 மற்றும் 49 வயதுடைய இரண்டு பெண்களே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரணியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை,மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இரு பெண்களின் சடலங்களை எல்பிட்டிய பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றிலிருந்து நேற்று பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக்  கிடைத்த தகவல் ஒன்றின் பேரிலேயே அங்கு சென்று  சடலங்களை மீட்டுள்ளனர்.

உயிரிழந்து காணப்பட்ட இருவரும் 70 மற்றும் 80 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் நாட்டில் இவ்வாறான மர்மமான முறையில் பெண்கள் உயிரிழக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய விசா நடைமுறை அறிமுகம்

ஈ - விசா பெற்றுக் கொள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் ...

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: மேலுமொருவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த...

ஷாபி வழக்கு இன்னும் நிறைவு பெறவில்லை – அத்துரலியே ரதன தேரர்

நாம் ஒருபோதும் இனவாதத்தினை தூண்டவில்லை என்பதோடு ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக...

சாதாரண தரப் பரீட்சை மே மாதம்- திருத்த பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர மீள் திருத்த பெறுபேறுகள் இவ்வருட சாதாரண தரப்...