வத்தளை சில பகுதிகளுக்கு நாளை 12 மணித்தியாலம் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை புதன்கிழமை காலை 10 மணிமுதல் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்தளை, ஹெந்தலை, எலக்கந்தை, அல்விஸ் நகரம், வெலியமுனை, கெரவலப்பிட்டி, மாபொல, ஹூணுப்பிட்டி, வெலிகந்த, வெவல்வத்த,கிரிபத்கொட புதிய வீதி, பதிலியாதுடுவ வீதி, தலுப்பிட்டிய வீதி மற்றும் அக்பர் பாலம் பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.