வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக தமிழர் விடுதலைக் கூட்டணி இன்று (18) கட்டுப்பணம் செலுத்தியது.
தமிழர் விடுதலை கூட்டணியின் நிர்வாக செயலாளர், இளைஞர் அணியின் தலைவர், வவுனியா நிர்வாக பொறுப்பாளர் கணேசநாதன் சபேசன் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
வவுனியா மாநகரசபை மற்றும் வவுனியா தெற்கை உத்தமிழ் பிரதேச சபை ஆகியவற்றில் தமிழர் விடுதலை கூட்டணி வவுனியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளது.
வவுனியாவில் திறமையானவர்களையும் மக்களுக்கு சேவை செய்ய கூடியவர்களை இந்த தேர்தலில் தாம் களமிறக்கவுள்ளதாக கட்டுப்பணம் செலுத்திய பின்னர் சபேசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.