அசாமில் உள்ள ஆக்கிரமிப்புக்கு எதிரான இயக்கம் சட்டவிரோத குடியிருப்பிருப்பாளர்கள் என்று தெரிவித்து 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை அங்கிருந்து வௌியயேற்றியுள்ளது.
குறித்த நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
குறித்த வௌியேற்றத்தில் அதிகமான முஸ்லிம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக அசாமின், கிழக்கு மாநிலத்தில் உள்ள சிறுபான்மை முஸ்லிம்களை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர் செயற்பாட்டாளர், சஃபூரா சர்கார், இந்த நடவடிக்கையை கண்டித்து ஒரு வீடியோவை ட்வீட் செய்தார். அதில், “‘ஜனநாயகத்தின் தாய்’ தனது சொந்த குடிமக்களை வெளியேற்றுகிறது, மேலும் அசாமில் 300 முஸ்லிம் வீடுகள் புல்டோசர்களை கொண்டு தரைமட்டமாக்கப்பட்டதாக பதிவிட்டுள்ளார்.