அடுத்தாண்டு மின்சார கட்டணத்தை அதிகாரிக்காவிட்டால் நீண்ட நேர மின்வெட்டுக்கு செல்ல நேரிடும் என எரிசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் மின்சாரக் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ளாவிட்டால், அடுத்த வருடத்தில் 6 மணித்தியால மின்சார விநியோகத் தடைக்கு செல்லவேண்டி ஏற்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்ததை குறிப்பிடத்தக்கது.