FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் அரையிறுதிக்கு ஆர்ஜென்டினா, குரோஷியா, மொரோக்கோ மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன.
இந்நிலையில், உலகக்கிண்ண காற்பந்து தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் ஆர்ஜென்டினா அணி குரோஷியாவை எதிர்கொள்கிறது.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 15ஆம் திகதி இடம்பெறவுள்ள மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை மொரோக்கோ அணி எதிர்கொள்கிறது.
இந்த இரு போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை உலகக்கிண்ண காற்பந்து தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதலாவது ஆபிரிக்க நாடாக மொரோக்கோ பதிவாகியுள்ளது. பலம்வாய்ந்த போர்த்துக்கல் அணியை வீழ்த்தியே அவ்வணி இம்முறை அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.