Date:

மின்மானியை சட்டவிரோதமாக மாற்றி மின்சாரம் பெற்ற OIC யின் மனைவி கைது!

மின்மானியை சட்டவிரோதமாக மாற்றி வீட்டுக்கு மின்சாரம் பெற்றுக் கொண்டதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் அரச வைத்தியசாலை ஒன்றில் தாதியராக கடமையாற்றுவதுடன் அவரின் கணவர் புத்தளம் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றுவது தெரியவந்துள்ளது.

குறித்த பெண் சட்ட விரோதமாக வீட்டுக்கு மின்சாரம் பெற்றர், என மின்சார சபையின் அதிகாரிகளால் கைது செய்து கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பெண் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள மின்மாணியை மாற்றி சட்ட விரோதமாக மின்சாரத்தை பெற்றதாக மின்சார சபைக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்டு திடீர் சோதனையில் அவரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

1000 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள...

மனுஷ நாணயக்கார சிஐடியில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். நடைபெற்று...

சுகாதார சேவையாளர்களின் விடுமுறைகள் ரத்து

சுகாதார அமைச்சின் ஊழியர்கள் விடுமுறை பெறுவதால், அமைச்சின் கடமைகள் மற்றும் அத்தியாவசிய...

தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

தபால் தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு மூன்றாவது நாளாக இன்றும்...