நாட்டில் நேற்றைய தினம் 334,020 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது
இதன்படி, நேற்றைய தினம் 76,694 பேர் சைனோபாம் தடுப்பூசியை முதலாவது தடவையாக பெற்றுள்ளனர்.
217,962 பேருக்கு இரண்டாவது தடவையாக சைனோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நேற்றைய தினம் 31,041 பேருக்கு அஸ்ட்ராசெனகா தடுப்பூசி செலுத்தப்பட்டதோடு 955 பேர் இரண்டாவது தடவையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
நாட்டில் இதுவரையில் 92 இலட்சத்து 46 ஆயிரத்து 429 பேருக்கு சைனோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் 31 இலட்சத்து 16 ஆயிரத்து 114 பேர் இரண்டாவது தடவையாகவும் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.