Date:

ஆசிரியர், அதிபர் சங்கங்கள் – அரசியல் கட்சிகளுக்கு இடையில் கலந்துரையாடல்

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்றைய தினம் சில அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது பிரச்சினைகள் குறித்து அரசியல் கட்சிகளுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஆசிரியர் – அதிபர்களின் வேதன முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு நேற்றைய தினம் கூடி கலந்துரையாடலை முன்னெடுத்திருந்தது.

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களை தனித்தனியாக சந்திப்பதற்கு அமைச்சரவை உபக்குழு தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking புனித ரமழான் மாதம் நாளை ஆரம்பம்!

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் புனித ரமழான் நோன்பு...

துறைமுக அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்

துறைமுக அதிகாரசபையின் புதிய தலைவராகத் துறைசார் நிபுணரான கலாநிதி மஹிந்த பராக்கிரம...

அக்குரேகொட கொலை வழக்கு: சகோதரர்கள் விளக்கமறியலில்

அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை...

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்திரி விக்ரமசிங்க அவர்களுக்கு, இம்மாதம்...