Date:

ஆசிரியர், அதிபர் சங்கங்கள் – அரசியல் கட்சிகளுக்கு இடையில் கலந்துரையாடல்

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்றைய தினம் சில அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது பிரச்சினைகள் குறித்து அரசியல் கட்சிகளுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஆசிரியர் – அதிபர்களின் வேதன முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு நேற்றைய தினம் கூடி கலந்துரையாடலை முன்னெடுத்திருந்தது.

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களை தனித்தனியாக சந்திப்பதற்கு அமைச்சரவை உபக்குழு தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்டது: நாளை நோன்பு ஆரம்பம்!

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்ட காரணத்தால் நாளை (18)  முதல் ரமழான்...

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை...

‘கெசானி’ புயலால் 59 பேர் பலி; 27,000 பேர் பாதிப்பு

மடகாஸ்கரில் ஏற்பட்ட கெசானி புயலால் 59 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 25,000...

ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழம் அன்பளிப்பு

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக...