Date:

ஆசிரியர், அதிபர் சங்கங்கள் – அரசியல் கட்சிகளுக்கு இடையில் கலந்துரையாடல்

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்றைய தினம் சில அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது பிரச்சினைகள் குறித்து அரசியல் கட்சிகளுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஆசிரியர் – அதிபர்களின் வேதன முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு நேற்றைய தினம் கூடி கலந்துரையாடலை முன்னெடுத்திருந்தது.

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களை தனித்தனியாக சந்திப்பதற்கு அமைச்சரவை உபக்குழு தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானின் 200 இலக்குகளை 24 மணி நேரத்தில் தாக்கிய இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200 இற்கும் மேற்பட்ட...

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...