Date:

அடுத்த ஆண்டுக்கான பாதீட்டு உரை இன்று நாடாளுமன்றில்!

2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டு உரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று(14) நாடாளுமன்றில் நிகழ்த்தப்படவுள்ளது.

ஜனாதிபதியின் பாதீட்டு உரை மீதான விவாதம் நாளை (15) முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

பின்னர் குழுநிலை விவாதம் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 8ஆம் திகதி வரை நடத்தப்படும்.

இது தொடர்பான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 8ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதேவேளை, பாதீட்டில் 2023ஆம் ஆண்டுக்காக 7,885 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு பாதீட்டு மதிப்பீடு 29.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

இன்றைய சூழ்நிலையில் இவ்வாறு அதிக தொகை மதிப்பிடப்பட்டுள்ளமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உடனடியாக வெளியேறுங்கள்! | இரண்டு பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் இரண்டு பிரதேசங்களுக்கான மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து, தேசிய கட்டட...

போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்ட பஹல கடுகன்னாவ பகுதி!

மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல...

அக்குறணை வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு!

அக்குறணை வெள்ளப் பிரச்சினை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம்...

உயர்தர பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் | அமைச்சரவை முடிவு தீர்மானம்!

கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பொருளியல் விஞ்ஞான வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம்...