Date:

இன்று முதல் விசேட நடமாடும் தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம்

மேல் மாகாணத்தில் நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை இன்றைய தினம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. கொவிட்19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.

சமூகத்தில் உள்ள வயோதிபர்கள், நோய் பாதிப்புக்களுக்கு ஆளானவர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் பலவீனமானவர்களின் நலன் கருதி இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைய, முதற்கட்ட தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவுள்ளவர்கள் இலங்கை இராணுவ வைத்திய படையினருடன் தொடர்பு கொண்டு முற்பதிவினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவ நோய் தடுப்பு மற்றும் மனநல மருத்துவ பணியகத்தின் 1906 அல்லது 011 28 60 002 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு  முற்பதிவு செய்வதன் ஊடாக தடுப்பூசிகளை வீட்டிலேயே செலுத்திக்கொள்ள முடியும் என கொவிட்19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறே கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, பதுளை, கிளிநொச்சி, அநுராதபுரம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள தடுப்பூசி செலுத்தல் நிலையங்கள் பலவற்றில் இராணுவத்தினரால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, இலங்கை காவல்துறையினர் மற்றும் கொழும்பு மாநகரசபை இணைந்து நடத்தும் கொவிட் தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு முகத்துவாரம் மிஹிஜய செவன சனசமூக நிலையத்திலுள்ள தடுப்பூசி செலுத்தல் நிலையத்தில் இன்றுகாலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கொவிட் தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே, கொழும்பு மாநகரசபை அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டோர் மேற்படி தடுப்பூசி செலுத்தல் மையத்தில் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளமுடியும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம் !

இலங்கையில் இரண்டு மாதங்களுக்குள் மாத்திரம் 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருவாயை...

விளையாட்டு போட்டியில் விபரீதம் – இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி !

தெனியாய பிரதேச பாடசாலையொன்றில் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிக்காக இல்லங்கள் தாயார்...

கிறீஸில் நிலநடுக்கம் !

பால்கன் பகுதியிலுள்ள நாடான கிறீஸில் இன்று(29) பிற்பகல் 12.47 அளவில் நிலநடுக்கம்...

பெரிய வெள்ளியை முன்னிட்டு விசேட பாதுகாப்பு !

இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைதல் மற்றும் அவரின் மரணம் ஆகியவற்றை நினைவுக்கூறும்...