Date:

யாழ். கல்லுண்டாயில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளான இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் (படங்கள்)

காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காரைநகர் சாலைக்குச் சொந்தமான 784 வழித்தடப் பேருந்தே இன்று காலை 7.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பஸ் கல்லுண்டாய் பகுதியில் வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்ப்பட்ட போது வேகக் கட்டுப்பாட்டையிழந்து இழுத்துச் செல்லப்பட்டு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், காயமடைந்த பயணிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

36 நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 52க்கும் மேற்பட்ட...

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள...

மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பு – பிரதமர்

மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்றும், அதற்கு...

வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன,பணியில் இருந்து இடைநீக்கம்

இலங்கை தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன, முதற்கட்ட...