கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருந்த போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில், இதுவரை 23 பேர் இவ்வாறு உயிரிழந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தொற்றா நோய்களினால் ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளாகி இருந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல இரண்டு தடுப்பூசிகளில் ஒன்றைப் பெற்றிருந்த போது கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரை 177 பேர் மரணித்துள்ளதாகவும் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்தார்.