Date:

உடனடியாக நாடு முடக்கப்பட்டாலும்கூட விதியை மாற்ற முடியாது – சுகாதார நிபுணர்கள்

இலங்கையின் ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் உடனடியாக முடக்கப்பட்டாலும்கூட, எதிர்வரும் 10 நாட்களில் கொரோனா வைரஸ் பரவும் விதியை மாற்ற முடியாது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

டெல்டா மாறுபாடு எந்த மாகாணங்களில் பரவியது என்பதை அடையாளம் காண வைத்தியர்கள் தற்போது வரிசைப்படுத்தலை அதிகரித்துள்ளனர் என்பதோடு, டெல்டா பிளஸ் குறித்த ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்டா மாறுபாடு மிகவும் அதிகமாக இருக்கும்போது டெல்டா மாறுபாடு இயற்கையாக உருமாறும்போது டெல்டா பிளஸாக மாற்றமடையுமென தெரிவித்துள்ள அவர்கள், இலங்கையில் இது இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், மருத்துவர்கள் விழிப்புடன் நிலைமையை கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

தற்போது டெல்டா மாறுபாடு தான் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பை ஏற்படுத்தியிருப்பதாக மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்

அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின்படியும் ஒரு நாளைக்கு 2,500 முதல் 2,800 நோயாளிகள் என மதிப்பிடப்பட்டாலும், அந்த எண்ணிக்கை 4,000 ஆகக் கூட இருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏனெனில் தற்போது பதிவாகியிருப்பது சுமார் 8 முதல் 10 நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மாத்திரமே என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவை அனுமதி

பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக...

கட்டாரில் இருந்து நேரடியாக தேசிய அணியில் இணைந்து கொள்ளும் வியாஸ் காந்த்

பாகிஸ்தானில் நடைபெறும் டி20 முத்தரப்பு தொடருக்கான இலங்கையின் தேசிய ஆடவர் அணியில்...

புதிய பெற்றோலிய குழாய் வழித்தடத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி

கொலன்னாவ முனையம் தொடக்கம் கொழும்பு துறைமுகம் வரைக்குமான குழாய் வழியில் பெற்றோலியப்...

பேருவளை கடலில் மிதந்து வந்த 200 கிலோ பொதிகள் மீட்பு

பேருவளை கடற்கரையில் இருந்து சுமார் இரண்டரை கடல் மைல் தொலைவில் கடலில்...