நாளொன்றில் பதிவான அதிக எண்ணிக்கையிலான கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 118 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,340 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் (ஓகஸ்ட் 4 – 10) நாட்களில் மாத்திரம் 707 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
ஓகஸ்ட் 10 – 118 இறப்புகள்
ஓகஸ்ட் 9 – 111 இறப்புகள்
ஓகஸ்ட் 8 – 94 இறப்புகள்
ஓகஸ்ட் 7 – 94 இறப்புகள்
ஓகஸ்ட் 6 – 98 இறப்புகள்
ஓகஸ்ட் 5 – 98 இறப்புகள்
ஓகஸ்ட் 4 – 94 இறப்புகள்
இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 334,939 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 298,162 ஆக அதிகரித்துள்ளது.